பாஜக வேட்பாளர்கள் 2 பேர் போட்டியிட மறுப்பு.. மேற்குவங்க தேர்தல் பரபரப்பு..

மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 2 பேர் போட்டியிட மறுத்துள்ளனர். மேலும் வேட்பாளர் தேர்வில் கடும் அதிருப்தி நிலவுகிறது.


தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மே2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. அங்கு பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர். இதனால், திரிணாமுல் - பாஜக இடையே கடும் மோதல்களுடன் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திரிணாமுல் கட்சியில் இருந்து கட்சி தாவிய முகுல்ராய், அதிகாரி உள்பட 22 பேருக்கு பாஜகவில் சீட் தரப்பட்டுள்ளது. மேலும், சவுரங்கி தொகுதியில் மறைந்த காங்கிரஸ் தலைவர் சோமந்திரநாத் மித்ராவின் மனைவி சீகா மித்ரா சவுத்திரி போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால், அவர் அதை மறுத்துள்ளார். நான் பாஜகவில் சேரவே இல்லை. என்னிடம் ஆலோசிக்காமல் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர். நான் காங்கிரஸ் கலாச்சாரத்தில் வளர்ந்தவள். என்னால் பாஜகவில் சேர முடியாது என்று கூறியிருக்கிறார்.

திரிணாமுல் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய சுவெந்து அதிகாரியை சீகா மித்ரா சில நாட்களுக்கு முன்பு சந்தித்திருந்தார். அதையடுத்து அவர் பாஜகவில் சேர்ந்து விட்டதாக தகவல் பரவியது. அதை அவர் மறுத்துள்ளார்.

இதே போல், காசிப்பூர் பெல்காச்சியா தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தருண் சகாவும் தான் பாஜகவில் சேரவே இல்லை என்றும் தன்னிடம் கேட்காமல் வேட்பாளராக அறிவித்துள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். அவரும் போட்டியிட மறுத்துள்ளார். அவர் திரிணாமுல் கட்சியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான மாலா சாகாவின் கணவர் ஆவார்.

இதற்கிடையே, ஜெகத்தல் தொகுதி பாஜக வேட்பாளராக திரிணாமுல் கட்சியில் இருந்து வந்த அரிந்தம் பட்டாச்சாரியா அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதியில் தனக்குத்தான் சீட் கிடைக்கும் என்று நம்பியிருந்த பாஜகவைச் சேர்ந்த அருண் பிரம்மா கடும் அதிருப்தி அடைந்தார். அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து நேற்றிரவு அந்த தொகுதி பாஜக அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சியில் இருந்து ஏராளமானோர் வெளியேறியதால், அந்த கட்சி கலகலத்து போயிருக்கிறது. இன்னொரு புறம், பாஜகவில் வேட்பாளர்கள் தேர்வில் பல குளறுபடிகள் காரணமாக அதுவும் கடும் போராட்டத்தில் உள்ளது. இதனால், தேர்தல் முடிவு மிகவும் இழுபறியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds