மீண்டும் ஆணவக்கொலையா...? மகளையே அரிவாளால் தாக்கிய தந்தை..

அனைவரும் படித்து  நாகரீக தன்மைய அடைந்தபோதிலும், ஆணவக் கொலைகள் நடந்துகொண்டு இருப்பது நாம் வாழ்வது மனித சமுதயதிலா என்று யோசிக்க வைக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு தெலங்கானாவை அதிரவைத்த ஆணவக் கொலையில், பிரனய் குமாரை கொலை செய்வதற்காக அம்ருதாவின் தந்தை மாருதிராவ், பீகார் கூலிப்படையிடம், ஒரு கோடி ரூபாய் பேரம் பேசிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அம்ருதா அளித்த புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த மாருதிராவ், அவருடைய சகோதரர் ஷரவன், அவருடைய நண்பர் அப்துல் கரீம் ஆகியோரை தெலங்கானா காவல்துறையினர் நேற்று கைதுசெய்தனர்.

இதனையடுத்து, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் பீகாரில் பதுங்கி இருந்த கொலையாளி சர்மா, அஸ்கர் அலி மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்த போலீசார் அவர்களை ஹைதராபாத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்க்கு முன்பு மிண்டும் ஒரு ஆவணக்கொலை,

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மிக முக்கிய பகுதியான எர்ரகாடா சாலையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மகளை பெற்ற தந்தையே சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பெற்றோரது எதிர்ப்பை மீறி, சந்தீப் என்ற இளைஞரை மாதவி என்ற இளம்பெண் திருமணம் செய்து கொண்டர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை புத்தாடை எடுத்து தருவதாக கூறி எர்ரகாடா சாலைக்கு வரவழைத்து ஆட்களை வைத்து தம்பதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தம்பதிகள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தனர்.

இந்த தாக்குதலில் மாதவிக்கு முகம் மற்றும் கைகளிலும், சந்தீப்பிற்கு கழுத்துப் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ள அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மகளின் கணவனை தாக்கிய மாதவியின் அப்பா, எர்காடா சாலை காவல்நிலையத்தில் சரணடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :