ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

Railway Alert express train service stopped for andhra storm warning

by Manjula, Oct 13, 2018, 11:14 AM IST

ஆந்திர மாநிலம் விஜயநகரம் வால்ட்டைர் பிரிவு இடையே, புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக, 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம் வால்ட்டைர் பிரிவு இடையே புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நேற்று இயக்கப்பட இருந்த விசாகப்பட்டினம்-சென்னை சென்டிரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் வண்டி எண்: 22801 ரயில் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல் இன்று அக்.13 இயக்கப்பட இருந்த சென்னை சென்டிரல்-விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் வண்டி எண் 22801 ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மேலும் நாளை இயக்கப்பட இருந்த திருவனந்தபுரம் சென்டிரல்-சில்சார் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12515) மற்றும் கவுகாத்தி பெங்களூரு கன்டோன்மென்ட் எக்ஸ்பிரஸ் (12510) ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

You'r reading ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை