நாசகார ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கும் உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு தூத்துக்குடியில் பெரும் போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இப்போராட்டத்தைத் தொடர்ந்து இந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு முடிவில் சில நிபந்தனைகளுடன் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக பாத்திமா பாபு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்ததுடன் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற தடையை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் செய்தது வேதாந்தா குழுமம். இந்த வழக்கு விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் வாதிட்டார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று அனுமதி அளித்தது.

மேலும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கும் தடை விதித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :