நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்” எளிதாக விண்ணப்பிக்கலாம்...புதிய செயலி அறிமுகம்..!

You can easily apply for a passport in any part of the country ...With the help of this New APP

by Loganathan, Sep 15, 2020, 14:03 PM IST


நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் 'பாஸ்போர்ட் சேவா' எனப்படும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல விரும்புவர்கள் பொதுவாகவே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது என்பது நடைமுறை சிக்கல்கள் சார்ந்ததாக உள்ளது. விண்ணப்பதாரர்கள் இருக்கும் மாநிலத்தில் பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகங்கள் இல்லாமல் இருந்தால், அண்டை மாநிலங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.


அதேபோல ஒரு சில மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளதால், மாநிலத்திற்குள்ளேயே சில நூறு கிலோமீட்டர் பயணம் செய்துதான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் சூழலும் இருந்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் 'பாஸ்போர்ட் சேவா' எனப்படும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


நீங்கள் குறிப்பிடும் முகவரியில் போலீஸ் துறையின் வழக்கமான சரிபார்ப்பு பணிகள் முடிந்த பின்னர் தபால் மூலம் பாஸ்போர்ட் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய முறையின் மூலம் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகளை மிக துரிதமாகவும், சுலபமாகவும் மாற்ற முடியும்.

You'r reading நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்” எளிதாக விண்ணப்பிக்கலாம்...புதிய செயலி அறிமுகம்..! Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை