ஆற்றில் மணல் கொள்ளை: திமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்

திண்டுக்கல் அருகே இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுவது குறித்து அரசு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே திருகம்பட்டி கிராமம் உள்ளது. ஊரின் அருகே சந்தனவர்த்தினி என்ற ஆறு செல்கிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக ஆற்றில் மணல் சேர்ந்துள்ளது இதனை மணல் மாபியா கும்பல் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகளை கொண்டு அரசு அனுமதி பெறாமல் மணல் அள்ளி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகமும் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த தகவல் அறிந்த திமுக முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமி மணல் மாபியா கும்பலை பிடிக்க சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார்.

இதனையடுத்து , முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமி வரும் தகவல் அறிந்த மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது 50 அடி ஆழத்திற்கு மண் அள்ளி இருப்பது தெரியவந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியசாமி: " சந்தனவர்த்தினி ஆற்றின் அரசு அனுமதி இல்லாமல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உதவியுடன் மணல் திருட்டுத்தனமாக அள்ளுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் திமுக அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்" என தெரிவித்தார்.

TMK-Administrator-murder-by-sand-robberers

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை
Tag Clouds