சபரிமலை கோவில் அருகில் வெடி பொருட்கள் கண்டெடுப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்கு அருகில் வெடிகுண்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொண்டு சபரி மலைக்கு சென்று வருவார்கள். இதில், தமிழக பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள்.
இந்நிலையில், போலீஸ் நடத்திய சோதனையில் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், வெடி குண்டுகள் தயாரிக்க உதவும் பொருட்கள் இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அங்கு எவ்வாறு இந்த பொருட்கள் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
You'r reading சபரிமலை கோவில் அருகில் வெடி பொருட்கள் கண்டெடுப்பு Originally posted on The Subeditor Tamil
More Crime News