பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வர், துணை முதல்வர் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி
M.K.Stalin questions to CM, DCM on Pollatchi rape issue
தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில், முதல்வரும், துணை முதல்வரும் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:
பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில், முதலில் சிபிசிஐடி, பிறகு சிபிஐ என்று, ஆட்சியாளர்கள் பதறுகிறார்கள். கண்துடைப்பு நாடகங்கள் வேண்டாம். விரைவான விசாரணையும் கடும் நடவடிக்கையும் தேவை.
இளம் பெண்களை சீரழித்த இப்பிரச்சனையில், குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கும் முயற்சியில் மட்டுமே ஆட்சியாளர்கள் தீவிரம் காட்டுகிறார்கள் என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில், முதல்வரும், துணை முதல்வரும் வாய் திறக்கவில்லை, ஏன் ?
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
You'r reading பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வர், துணை முதல்வர் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி Originally posted on The Subeditor Tamil
More Politics News