தேனி எங்கள் கோட்டை, யாரும் நுழைய முடியாது –சூளுரைக்கும் ஓபிஎஸ் மகன்
ravindranath kumar says about election
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமார் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ரவீந்திரநாத்திடம்,‘அமமுக வேட்பாளராகத் தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனால், போட்டி கடுமையாக இருக்கும் என்கிறார்கள்’ இது பற்றின உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, ‘தேனி அதிமுகவின் கோட்டை. இங்கு யாரும் உள்ளே நுழைய முடியாது, நெருங்கவும் முடியாது’ என்று கூறினார்.
You'r reading தேனி எங்கள் கோட்டை, யாரும் நுழைய முடியாது –சூளுரைக்கும் ஓபிஎஸ் மகன் Originally posted on The Subeditor Tamil
More Politics News