நடைமுறை சிக்கலா? அரசின் அலட்சியம்...! –டிடிவி தினகரன் பளார்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை தற்போது யார் வசம் இருக்கிறது? என தமிழக அரசைக் கடுமையாக கண்டித்துள்ளார் டிடிவி தினகரன்.

பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகளிடம் முகநூல் வாயிலாக நண்பர்களாகப் பழகி, அவர்களை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவம் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், 60க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘பொள்ளாச்சி வழக்கில் அரசியல் பின்புலம் காரணமாக உண்மையான குற்றவாளிகளைத் தப்ப வைக்க ஆரம்பத்தில் முயற்சிகள் நடைபெற்றன. அதற்கு, போலீஸ் அதிகாரிகள் சிலர் துணை போனார்கள். இதனால், குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதால்தான் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியில் சொல்லக்கூடாது என்ற நடைமுறை இருந்தும் மாவட்ட எஸ்.பி அந்த தவறை செய்தார். அதே தவறைதான் தமிழக அரசும் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டது. அரசியல் ரீதியாக மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக-அதிமுக கூட்டணி வைத்திருப்பதற்கும் இந்த வழக்கு விசாரணை சிபிஐ விசாரிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை.

தனக்கு மேல் உள்ள அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பெண் எஸ்பி ஒருவர் புகார் கொடுத்தும், அது தொடர்பாக ஒரு வழக்கைப் பதிந்து விசாரணை நடத்தாது மட்டுமின்றி, குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரியைப் பெயரளவில் கூட பணியிட மாற்றம் செய்ய எடப்பாடி பழனிசாமி அரசு ஆர்வம் காட்டவில்லை. பெண்கள் பாதுகாப்பில் அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. பொள்ளாச்சி சம்பவத்தில் அலட்சியமாக இருந்து குற்றத்தை மூடி மறைக்க தற்போது அந்த வழக்கின் விசாரணை யார் வசம் இருக்கிறது? எந்த நிலையில் இருக்கிறது? சிபிஐக்கு மாற்றுவதில் என்ன நடைமுறை சிக்கல்?’ எனப் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து இருக்கிறார் டிடிவி தினகரன்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds