குடைச்சல் கொடுக்கும் கட்சி... காலி செய்ய இம்ரான் கானின் பலே திட்டம்!

by Sasitharan, Apr 16, 2021, 20:17 PM IST

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் முகமது நபியை சித்தரிக்கும் கார்டூன்களை மீண்டும் வெளியிடுவதற்கான ஒரு பத்ரிகைக்கான உரிமை ஒப்புதல் அளித்தார்.எனக் கூறி இதற்கு எதிராக பாகிஸ்தானிய வலதுசாரி கட்சியான தெஹ்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான் என்ற கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து, அவருடைய கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பாகிஸ்தானில் நாடு தழுவிய அளவில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன்பிகாரணமாக பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் கிளர்ச்சி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பாகிஸ்தானில் தங்கியிருக்கும் பிரான்ஸ் நாட்டினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது. தெஹ்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான் என்ற கட்சி இந்த விவகாரத்தில் இம்ரான் கான் அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. இதே விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பே தெஹ்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான் கட்சி போராட்டங்களை முன்னெடுத்தது. அப்போது இம்ரான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில், மூன்று மாதங்களில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு உறுதியளிக்க, போராட்டத்தை கைவிட்டது டி.எல்.பி எனப்படும் தெஹ்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான் கட்சி. ஆனால் கொடுத்த உறுதிப்படி, இம்ரான் கான் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தற்போது மீண்டும் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. போராட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, டி.எல்.பி கட்சியின் தலைவரான சாத் ரிஸ்வி நேற்று கைது செய்யப்பட்டார். இவரின் கைதுக்கு பின்பே போராட்டம் அதிகரிக்க தொடங்கியது. எனினும் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இப்படி தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் டி.எல்.பி கட்சியை தடை செய்ய இம்ரான் அரசு முயன்று வருவதாக பேச்சுக்கள் எழுந்து வருகிறது. டி.எல்.பி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறது என்ற பொதுவான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் இதே காரணத்தை பயன்படுத்தி அக்கட்சியை முடக்க திட்டமிட்டுள்ளது எனக்கூறப்படுகிறது.

You'r reading குடைச்சல் கொடுக்கும் கட்சி... காலி செய்ய இம்ரான் கானின் பலே திட்டம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை