லொடுக்கு பாண்டி நாக்குல சனி... பஞ்சாயத்து பார்ட்டி திமுக- அமைச்சர் ஜெயக்குமார்

Sep 22, 2018, 18:03 PM IST

பஞ்சாயத்து பார்ட்டியான தி.மு.கவுக்கு அதிமுக குறித்து பேச தகுதியில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

காற்றாலை மின்சார கொள்முதல் ஊழல் தொடர்பாக பேசிய ஸ்டாலின், தம்மீது அமைச்சர் தங்கமணி வழக்கு தொடரவில்லை என்றால், அவர் மீது தி.மு.க வழக்கு தொடரும் எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், " சர்க்கரை, பூச்சி மருந்து உள்ளிட்ட ஊழலின் ஒட்டு மொத்த சாம்ராஜ்யமான தி.மு.கவுக்கு அதி.மு.க குறித்து பேச தகுதியில்லை. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார்." என சவால் விடுத்தார்.

எம்.எல்.ஏ கருணாஸ் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், என்னை அரிச்சந்திரன் என வர்ணித்த கருணாஸுக்கு நன்றி.லொடுக்குப் பாண்டியாக இருந்து நாக்கில் சனி. அதனால் அதிகம் அனுபவப்படுவார்" என விமர்சித்தார்.

"சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?. திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது" என அமைச்சர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

You'r reading லொடுக்கு பாண்டி நாக்குல சனி... பஞ்சாயத்து பார்ட்டி திமுக- அமைச்சர் ஜெயக்குமார் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை