2015-ல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டால் கிடைத்த பலன் என்ன ? - தமிழக அரசிடம் அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்!

 2015-ல் நடந்த முதலாவது உலக முதலீட்டாளர் மாநாட்டால் என்னென்ன பலன் கிடைத்தது? என்ற அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரு தினங்களாக 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளது தமிழக அரசு .இதில் 3 லட்சத்து 431 கோடிக்கு புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் உலக முதலீட்டாளர் மாநாடு ஆடம்பரமாக அதிக பொருட்செலவில் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 2015-ல் நடத்தப்பட்ட முதலாவது மாநாடும் இதே போன்று நடத்தப்பட்டது. ஆனால் என்ன பலன் கிடைத்தது என்ற தகவல்கள் இல்லை.

எனவே உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி தனியார் நிறுவனம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்ய நாராயணா, ராஜமாணிக்கம் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2015-ல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் என்னென்ன தொழிற்சாலைகள் வந்துள்ளன.

எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :