பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்க விட்ட வைகோ - மதுரையில் பரபரப்பு!

Prime Minister Modis visit to protest the black balloons Vaiko had to fly in madurai Furore!

by Nagaraj, Jan 27, 2019, 11:54 AM IST

மதுரையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் நடந்த கருப்புக்கொடி போராட்டத்தின் போது கருப்பு பலூன்களையும் பறக்க விட்டார் வைகோ.

இதனால் பெரும் பரபரப்பும், போலீசாருடன் தள்ளுமுள்ளும் நடந்தது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நடந்த கருப்புக் கொடி போராட்டத்தில் வைகோவுடன், மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். திடீரென கருப்பு நிற பலூன்களை கொத்து, கொத்தாக வானில் பறக்க விட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தடுக்க போலீசார் முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மோடி மதுரையை விட்டு வெளியேறும் வரை போராட்டம் நீடிக்கும் என வைகோ ஆவேசமாக பேசினார். இதைத் தொடர்ந்து வைகோ உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

You'r reading பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்க விட்ட வைகோ - மதுரையில் பரபரப்பு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை