மீன் குழம்பு அடம்பிடித்த மாமியார் - மகன்களை கொன்று தற்கொலைக்கு முயற்சித்த பெண்!

மீன் குழம்பு கேட்டு மாமியார் வாக்குவாதம் செய்ததால் மருமகள் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே உள்ள சந்தைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அம்மு. 2 வயதாகும் இவரின் கணவர் பிரபு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் தனது இரண்டு சிறுவயது மகன்களுடன் மாமியார் மீனாவுடன் வசித்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் கணவர் உயிரிழந்ததால் அம்மு சோகமாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அம்முவிடம் மீன் குழம்பு கேட்டு நேற்று நச்சரித்துள்ளார் அவரது மாமியார் மீனா. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் அம்முவை கடுமையான சொற்களால் மாமியார் மீனா வசைபாடவே, அவர் மனவருத்தம் அடைந்துள்ளார்.

ஏற்கனவே கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீளாத அம்மு மாமியாருடன் நடந்த மோதலால் மேலும் மனவருத்தம் அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் தற்கொலை செய்ய முடிவெடுத்த அவர், மாமியார் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தனது இரண்டு மகன்களுக்கும் விஷத்தை கொடுத்து தானும் விஷம் குடித்து மயங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அம்மு வெளியில் வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர்.அப்போது மூன்று பேரும் மயங்கியபடி கிடக்க அவர்களை தூக்கிக்கொண்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அம்முவின் மகன்கள் இருவருமே உயிரிழந்துவிட்டனர். இருப்பினும் அம்மு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அம்மு கொண்டு செல்லப்பட்டுள்ளார். நடந்த சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் குழம்புகாக தற்கொலை நடந்துள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds