முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு - மீண்டும் சென்னையில் தரையிறக்கம்!

technical fault in tn cm edappadi Palani Samy travelled flight

by Nagaraj, Mar 1, 2019, 10:15 AM IST

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரை இறக்கப்பட்டது.

பிரதமர் மோடி இன்று பிற்பகல் கன்னியாகுமரியில் அரசு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தனியார் விமானத்தில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயணம் செய்தார். விமானம் பறந்து கொண்டிருக்கும் போது இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அவசரமாக மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.

பின்னர் வேறொரு விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து காரில் கன்னியாகுமரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயணமாகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு - மீண்டும் சென்னையில் தரையிறக்கம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை