தமிழ்நாட்டைக் குறிவைத்திருக்கிறார்களா இந்துத்துவா கோஷ்டி? - விசிக ரவிக்குமார் திடுக் தகவல்
VCK Ravikumars shock FB Post
சமூக வலைதளங்கள் மூலம் தமிழ்நாட்டை இந்துத்துவா கோஷ்டிகள் குறி வைத்துள்ளார்களா? என அதிர வைக்கும் ஃபேஸ்புக் பதிவை போட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலர் ரவிக்குமார்.
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ரவிக்குமார் எழுதியுள்ளதாவது:
சனாதன சக்திகள் தமிழ்நாட்டைக் குறிவைத்து மிகப்பெரிய திட்டம் ஒன்றைத் தீடியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ட்விட்டர் பதிவுகளை ஆய்வு செய்த ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'ஹேக்கர்' எலியட் ஆல்டர்சன் தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் பாஜக சார்புள்ள ட்விட்டர் ஹேண்டில் ஒன்று ( @seeni48494218) கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதியன்று மூன்று மணி நேரத்தில் 1500 ட்வீட்டுகளை பதிவிட்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளார்.
இந்த ட்விட்டர் அக்கவுண்ட் மணிக்கு 36 ரீட்வீட்டுகளை செய்வதாகவும் இது ஒன்று சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட நபராகவோ அல்லது ஒரு ரோபோட் எந்திரமாகவோ இருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில்தான் அதிக இடங்களைப் பிடிக்கப்போகிறோம் என பிரதமர் மோடி பேசியிருப்பதை இத்துடன் இணைத்துப் பார்த்தால் தமிழ்நாட்டில் சோஷியல் மீடியாவையும் எந்திரங்களையும் பயன்படுத்தி ஏதோ பெரிதாக செய்யப்போகிறார்கள் எனப் புரிகிறது. தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!
இவ்வாறு ரவிக்குமார் எழுதியுள்ளார்.
You'r reading தமிழ்நாட்டைக் குறிவைத்திருக்கிறார்களா இந்துத்துவா கோஷ்டி? - விசிக ரவிக்குமார் திடுக் தகவல் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News