என் உயிர் கொடுத்தாவது நான் காப்பாற்றுவேன் -சீறும் சீமான்
என் உயிர் கொடுத்தாவது நான் காப்பாற்றுவேன் -சீறும் சீமான்
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியாகும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தெரிவித்தார். இதனிடையில், கட்சியின் தேர்தல் சின்னமாக இரட்டை மெழுகுவர்த்தி கேட்கப்பட்டது. ஆனால், அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை. பதிலாக, கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள சீமான், `மற்றவர்களைப் போல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம் இதைச்செய்வோம் என்று அல்லாமல் நாட்டு மக்களுக்காக உரக்கக் குரல் கொடுப்பேன்' என்றவர், 'தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஏனெனில், உயிர் கொடுத்தாவது விவசாயிகளை நான் காப்பேன் என்பதற்காகத் தான். உயிர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை; உழவை மீட்டு உலகைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர் கொள்வோம் என்றார்.
You'r reading என் உயிர் கொடுத்தாவது நான் காப்பாற்றுவேன் -சீறும் சீமான் Originally posted on The Subeditor Tamil
More Politics News
READ MORE ABOUT :