பாவத்தை ஓப்புக் கொண்டு இருவருக்கு மரணத் தண்டனை அளித்துவிட்டேன்!- காதலியை கொன்ற இமானுல்லா உருக்கமான கடிதம்

young woman killed by illegitimate lover and he also commit suicide

by Mari S, Apr 6, 2019, 08:48 AM IST

சேலத்தில் உள்ள ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்றில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணை கடைக்குள் புகுந்து ஷட்டரை சாற்றி கத்தியால் குத்திக் கொன்ற கள்ளக் காதலன் அந்த கடைக்குள்ளேயே தூக்கு மாட்டி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட சித்ராபானு (வயது 25) சில ஆண்டுகளுக்கு முன்னர் குடும்ப தகராறு காரணமாக சேலம் சூரமங்கலம் ஆசாத் நகரைச் சேர்ந்த கணவர் சாகுலை பிரிந்து, தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

பெற்றோர் வீட்டில் வசித்து வந்த சித்ராபானு அருகில் உள்ள காசக்காரனூர் பகுதியில் உள்ள ஐஸ்க்ரீம் பார்லரில் வேலைக்குச் சேர்ந்தார்.

வெளிநாட்டிற்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் ஏஜெண்ட் வேலை பார்த்து வந்த 54வயது இனாமுல்லா என்பவரிடம் சித்ராபானு தானும் வெளிநாடு செல்ல விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்ய கோரிக்கை விடுத்தர்.

இதன்மூலம் இனாமுல்லா மற்றும் சித்ராபானு இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை ஐஸ்க்ரீம் பார்லரில் சித்ராபானுவைத் தவிர வேறு யாரும் இல்லாததை உறுதி செய்துக் கொண்ட இனாமுல்லா, கடைக்குள் வந்து சித்ராபானுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், சித்ராபானு இதற்கு மறுக்கவே, ஷட்டரை சாற்றிக் கொண்டு தான் எடுத்து வந்திருந்த கத்தியின் மூலம் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார். பின்னர், அந்த கடையிலேயே அவரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

விவரம் அறிந்த போலீசார், கடையின் ஷட்டரை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, இருவரது சடலங்களை பார்த்து அதிர்ந்து போயினர்.

இந்த சம்பவம் குறித்து இனாமுல்லா எழுதியிருந்த உருக்கமான ஒரு கடிதம் சிக்கவே, இவர்களுடைய கள்ளத் தொடர்பும், அதனால், இனாமுல்லாவின் மனைவி மற்றும் மகள் அவரை ஒதுக்கியதும் தெரியவந்தது.

தன்னுடன் கள்ள உறவுக் கொண்ட சித்ராபானு, திருமணம் செய்து வாழ மறுப்பு தெரிவித்ததால், தனக்கும் அவருக்கும் கொடுக்க வேண்டிய பாவ தண்டனையை வழங்கியதாக இனாமுல்லா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி அறிந்த சேலம் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

You'r reading பாவத்தை ஓப்புக் கொண்டு இருவருக்கு மரணத் தண்டனை அளித்துவிட்டேன்!- காதலியை கொன்ற இமானுல்லா உருக்கமான கடிதம் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை