தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் ஐடி ரெய்டு!

தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பாகக் கனிமொழி, பா.ஜ சார்பாகக் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆளுமை மிகுந்த இரு பெண் தலைவர்கள் களம் இறங்கியிருக்கும் தூத்துக்குடி தொகுதியில் இரு முனைப்போட்டி கடுமையாக இருக்கிறது. ஸ்டெர்லைட் துப்பாகிச்சூட்டில் 13 அப்பாவி உயிர்கள் பலியான விவகாரம், தாது மணல் கொள்ளை, தாமிரபரணி நதி நீர் பிரச்னை, தீப்பெட்டித் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சிக்கல், உப்பளத் தொழிலாளர் மற்றும் மீனவர் பிரச்னை என இடியாப்பச் சிக்கல்கள் மிகுந்த இந்தத் தொகுதியில் வெற்றிக்காகக் கனிமொழியும் தமிழிசையும் கடுமையாகப் போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே இன்றுபிரசாரத்தை நிறைவு செய்த பின் தூத்துக்குடியில் அவர் தங்கியிருக்கும் குறிஞ்சி நகர் வீட்டுக்கு வருகை தந்தார். அப்போது அங்கு இரண்டு கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழியின் வீட்டில் சோதனை நடத்தினர். தற்போது வரைக்கும் இந்த சோதனை நடந்து வருகிறது. வீட்டில் உள்ள பணியாளர்களை வெளியேற்றிய அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏதுவாக குறிஞ்சி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகை எடுத்திருந்தார் கனிமொழி. இந்த இல்லம் தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமானது. இங்கு தான் அவரது அலுவலகமும் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே, வருமான வரித்துறை அதிகாரிகளின் திடீர் சோதனையால் கனிமொழியின் இல்லம் முன்பு தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் உள்ளிட்ட ஏரளமான கட்சி பிரமுகர்கள் திரண்டுள்ளனர். அவர்கள் மோடி அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளதால் அங்கு தற்போது பதற்றம் நிலவி வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds