சட்டசபைத் தேர்தல் எப்ப வந்தாலும் சந்திக்கத் தயார்! ரஜினி அறிவிப்பு!!

Rajini said that he is very much ready to face next tamilnadu legislative assembly elections

Apr 19, 2019, 14:34 PM IST

சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.


ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளி்த்த பேட்டி வருமாறு :


* தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவு மட்டுமே நடந்துள்ளது. இது குறைந்துள்ளதற்கு என்ன காரணம்?
70 சதவீதம் என்பது ஓ.கே.தான். சென்னையில்தான் 50 சதவீதத்தை ஒட்டி இருக்கிறது. தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்ததால் நிறைய பேர் வெளியூர்களுக்கு போயிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

* வெயில் அதிகமாக இருந்ததும், அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்காததும் வாக்குப்பதிவு குறைவுக்கு காரணமாக இருக்கிறதா?
அது கண்டிப்பாக தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டிய விஷயம்தான்.

* தேர்தலுக்கு பின்பு எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்று சொல்கிறார்களே?
மே 23ம் தேதிக்கு பிறகு பார்ப்போம்.

* மோடியே மீண்டும் பிரதமராக வருவாரா?
மே 23ம் தேதி தெரிந்து விடும்.
* நீங்கள் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பிப்பதாக சொன்னீர்களே?
தேர்தல் வரட்டும். ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற மாட்டேன்.
* சட்டசபைக்கு எப்ப தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறீர்களா?
எப்ப, எப்ப வந்தாலும் சந்திக்கத் தயார்
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தேர்தல் நாள்: ரஜினி, அஜித், விஜய் ஓட்டுப் போட்டாச்சு.. நீங்க ஓட்டுப்போட போகலையா?

You'r reading சட்டசபைத் தேர்தல் எப்ப வந்தாலும் சந்திக்கத் தயார்! ரஜினி அறிவிப்பு!! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை