மோடியை கிண்டல் செய்த குஷ்பு...! ட்ரோல் செய்பவர்களுக்காக படம் வெளியிட்டுக் கலக்கல்...

இணையதளத்தில் தன்னை எதிர் விமர்சனம் செய்பவர்களுக்காக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை குஷ்பு.

மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று கேரளாவில் நடைபெற்றது. இங்கு, பல பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்த நிலையில், கண்ணூர் தொகுதிக்குட்பட்ட மையில் கண்டக்காய் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு வாக்காளர் ஓட்டுபோட்டு கொண்டிருக்கும்போது,  வாக்கு எந்திரத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த ஒப்புகைச்சீட்டு (விவிபேட்) காட்டும் எந்திரத்திற்குள் இருந்து ஒரு பாம்பு வெளியே வந்தது. இதனை, சற்றும் எதிர்பாராத அந்த நபர் கூச்சலிட்டார். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து, விவிபேட் இயந்திரத்துக்குள் பாம்பு இருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்து திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சசி தரூர், ‘விவிபேட் இயந்திரத்துக்குள் பாம்பு புகுந்திருப்பது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை’ என்று குறிப்பிட்டு ட்விட்டரில் இது பற்றின செய்தியைப் பகிர்ந்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து, நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, ‘மோடி தலைமையிலான ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கும்’ என்று ட்வீட் செய்து செய்து மோடியைக் கிண்டல் செய்திருந்தார். இதற்கு, பாம்பு புகுந்ததற்கு எல்லாம் மோடி பொறுப்பாக முடியுமா என குஷ்புவின் கருத்துக்கு எதிராக ட்வீட் செய்தனர் நெட்டிசன்கள். ஒரு பக்கம் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

ஆனால், குஷ்பு தன்னை எதிர் விமர்சனம் செய்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய பிரத்தியேக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, especially for the trolls.. எனப் பதிவிட்டுள்ளார். 

என்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - மனைவியே கொன்று நாடகமாடியது அம்பலம்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds