அந்த நபர்களுக்காக...அரசியல் வாழ்க்கையை விட்டு விலகத் தயார்! -தொல்.திருமாவளவன்

thol thirumavalavan slams pmk leader ramadoss

by Suganya P, Apr 24, 2019, 00:00 AM IST

பொன்பரப்பி கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 18ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவின் போது, அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் இரு சமூகத்தினர் இடையே மோதல் வெடித்தது. திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால், அப்பகுதி பட்டியலின மக்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் காயம்பட்டவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ‘பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. நடுநிலையாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. கூட்டணியில் இருந்தாலும்;இல்லாவிட்டாலும் மானத்திற்காக வாழ்பவன் நான். ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ் பணத்திற்காக; பதவிக்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். தென் தமிழகத்தில் வாக்குச்சாவடி முகவர்களை அமைக்க பாமகவுக்கு ஆள் உள்ளதா? இந்துக்களின் முதல் எதிரி பாஜகதான். அதேபோல், வன்னியர்களின் ஒரே எதிரி பாமக’ என்று பேசிய திருமாவளவன்,

ராமதாஸ் மற்றும் அன்புமணிக்குத் தான் அரசியலில் இருப்பது பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்காக அரசியலை விட்டு விலக தயார். எனக்குத் தேவை உழைக்கும் மக்களின் பாதுகாப்பு...அதைத் தவிர ஒன்றும் தேவையில்லை. அதனால், அவர்களுக்காக அரசியல் வாழ்க்கையை விட தயாராக இருக்கிறேன்’ என்று கொந்தளித்து பேசினார்.

`இது கேரளாவில் மட்டுமே நடக்கும்' - வைரலான போட்டோ; பாராட்டும் நெட்டிசன்கள்

You'r reading அந்த நபர்களுக்காக...அரசியல் வாழ்க்கையை விட்டு விலகத் தயார்! -தொல்.திருமாவளவன் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை