இலவசங்களுக்காக நிதி ஒதுக்குவதற்கு பதில் அணை கட்டலாம்! –உயர் நீதிமன்றம் கருத்து

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மழைநீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்தக் கோரி வி.பி.ஆர் மேனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கில், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு உள்ளிட்டவற்றைப் பலப்படுத்துவதற்கு அரசு தரப்பில் எடுத்த நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை அறிக்கையாக சமர்ப்பித்து' விளக்கினார். அப்போது, மனுதாரர் தரப்பில், `ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் மழை நீர் வீணாவதைத் தடுக்க முடியும்; நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள்தான் வெள்ள சேதங்களுக்கு காரணமாக இருக்கின்றது' என வாதிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக, தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்த குழு தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை 6 மாதங்களில் அளவிட்டு, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பணிகளை மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இல்லையெனில், தென் ஆப்பிரிக்காவை போல, தமிழகத்திலும் தண்ணீர் இல்லா அபாயம் ஏற்பட வாய்ப்பு உருவாகும். நீர்நிலைகளை பாதுகாக்க தவறினால் வருங்கால சந்ததியினர் பாட்டிலில்தான் நீரை பார்க்கும் சூழல் ஏற்படும். இலவசங்களுக்காக நிதியை ஒதுக்குவதற்குப் பதில் அணைகளை கட்டலாம்’ எனக் கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

பிரதமர், அமித்ஷா மீது புகார்! தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds