திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்..! உதயநிதி பேச்சால் உற்சாகமடைந்த உ.பி.க்கள்..!

udhayanidhi Stalin speech about alliance

by Dibrias, Jun 26, 2019, 10:54 AM IST

சென்னை எழும்பூரில் ஆயிரம் கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, எடப்பாடி அரசு மீதும் மோடி அரசின் மீது உள்ள வெறுப்பு மட்டுமல்ல, திமுக தலைவர் ஸ்டாலின் மீதான ஆதரவு அலை காரணமாகவே திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளதாக குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கு தன்னுடைய கையால் நலத்திட்ட உதவிகள் வழங்கி யது மிகப்பெரிய பாக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசு மழை வேண்டி யாகம் வளர்ப்பதற்கு பதிலாக மரம் வளர்ப்பது நல்லது என்று கூறினார். இன்னும் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தாலும் கூட்டணிக்கு எந்தவித சிக்கலையும் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்..? மீண்டும் அடித்து சொல்கிறார் மு.க.ஸ்டாலின்

You'r reading திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்..! உதயநிதி பேச்சால் உற்சாகமடைந்த உ.பி.க்கள்..! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை