லேடீஸ் ஹாஸ்டலில் புகுந்த இளைஞர்..! தர்ம அடி கொடுத்த பெண்கள்

Men enter in womens hostel

Jul 2, 2019, 18:43 PM IST

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலை நாராயணசாமி தோட்டத்தில் நர்சிங் வேலை பார்த்து வருபவர்களுக்கென தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விடுதிக்குள் நுழைந்து போது சத்தம் கேட்டு விடுதிக்குள் இருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்ததுடன், அடித்து உதைத்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விடுதி நிர்வாகத்தினர் போலீசில் பிடிபட்ட நபர் ரூ. 80 ஆயிரம் திருடியதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

போலீசார் அந்த நபரிடம் விசாரித்ததில் மந்தைவெளியைச் சேர்ந்த சரத் என்பது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் விடுதிக்குள் நுழைந்து அத்துமீறி நுழையும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

 

You'r reading லேடீஸ் ஹாஸ்டலில் புகுந்த இளைஞர்..! தர்ம அடி கொடுத்த பெண்கள் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை