சிறுமியை துன்புறுத்தியதாக பானுப்பிரியா மீது வழக்கு..

Actress Bhanupriya charged for physical harassment of minor girl

by எஸ். எம். கணபதி, Sep 20, 2019, 15:15 PM IST

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீதும், அவரது சகோதரர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் நடித்த பிரபல நடிகை பானுப்பிரியா, சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். அவரது அம்மா மற்றும் தம்பி கோபாலகிருஷ்ணன் உடனிருக்கிறார்கள். இந்நிலையில், ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்தாண்டில் பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பானுப்பிரியா வீட்டில் நகைகளை அந்த வேலைக்கார சிறுமி திருடியதாக கூறி, திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, ஆந்திராவுக்கு திரும்பிய அந்த சிறுமி தனது பெற்றோரிடம், தன்னை பானுப்பிரியா வீட்டில் அடித்து துன்புறுத்தியதாகவும், செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் பானுப்பிரியா குடும்பத்தினர் மீது புகார் கூறியுள்ளனர். இந்த புகார், கோதாவரி மாவட்ட எஸ்பி மூலமாக சென்னை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

தற்போது, பானுப்பிரியா, அவரது தம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சிறார் கொடுமை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே போல் பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த ஒருவர் மீது நகைகளை திருடியதாக பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, அந்த வேலையாள் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரும் வழக்கு விசாரணையின் போது, தன்னை பானுப்பிரியாவின் தாயார் செக்ஸ் கொடுமைப்படுத்தியதாக புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading சிறுமியை துன்புறுத்தியதாக பானுப்பிரியா மீது வழக்கு.. Originally posted on The Subeditor Tamil

More Chennai News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை