உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு.. சட்டப்பஞ்சாயத்து விளக்கம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் குறித்து சட்டப் பஞ்சாயத்து விளக்கம் அளித்துள்ளது.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கோரி தொடர்ந்து போராடி வந்த சட்டப்பஞ்சாயத்து இயக்கம், இப்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி பொதுநல வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு காரணம் என்ன?

1. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டால் அதில் அதிக இடங்களை வென்றுள்ள கட்சிக்கு வாக்களிக்கவே நகர்ப்புற வாக்காளர்கள் விரும்புவார்கள். இது தேர்தல்களின் அடிப்படையான "சமதள வாய்ப்பு" என்பதைத் தகர்க்கிறது.

2.அரசியல் காரணங்களுக்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலேயே போய்விடக் கூடும். எனவே, இந்த பொதுநலன் வழக்கு மூலம் தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்து, விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்க வைப்பதற்குத்தான்.

3. நீதிபதிகள் மனது வைத்தால், தேர்தல் ஆணையம் எப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தும் என்பது குறித்து எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை வாங்க முடியும். நீதிபதிகள் இதை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

4. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே( டிச.3) நகர்ப்புற தேர்தல் முடியாதவரை ஊரக முடிவுகளை வெளியிடக் கூடாது என்று வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையத்திற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் விரிவான மனு அனுப்பி இருந்தது.

5. விளைவுகள் எதுவாக இருந்தாலும், முயற்சிகள் முக்கியம் என்பதே சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் போக்கு. அதன்படியே இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம்.
இவ்வாறு செந்தில் ஆறுமுகம் கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds