அமைதி ஏற்படுத்தத் தயார்.. முஸ்லிம் தலைவர்களிடம் ரஜினிகாந்த் உறுதி..

நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும், குறிப்பாக முஸ்லிம்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது என்றும், முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் முதல் குரல் கொடுப்பேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். கடைசியாக அவர் அளித்த பேட்டியில், டெல்லியில் நடந்த கலவரத்திற்கு மத்திய உளவுத் துறையின் தோல்வியே பொறுப்பாகும் என்றும், கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ராஜினாமா செய்து விட்டுச் செல்லுங்கள் என்று அமித்ஷாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பேசியிருந்தார். ஆனால், அப்போதும் சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது வீணானது என்றும், போராட்டங்களை இதற்கு மேலும் அனுமதித்தால் எதிர்காலத்தில் ரொம்ப கஷ்டம் என்றும் கூறியிருந்தார். இது போராடும் முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ரஜினிக்குத் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் அன்வர் பாதுஷா உலவி ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ரஜினியின் கருத்து தவறானது என்றும் முஸ்லிம்களின் போராட்டம் குறித்து விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி, முஸ்லிம் மதகுருமார்களைச் சந்திக்கத் தயாராக உள்ளதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, காஜா முயீனுத்தீன் பாகவி, அன்வர் பாதுஷா உலவி, முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, அப்துல் அஜீஸ் பாகவி, இல்யாஸ் ரியாஜி ஆகியோர் ரஜினியை நேற்று அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர்.

இதற்கு பின்பு, செய்தியாளர்களிடம் காஜா முயீனுத்தீன் பாகவி கூறுகையில், முஸ்லிம்களின் அச்ச உணர்வை ரஜினி புரிந்து கொண்டார். அதில் உள்ள நியாயமான காரணங்களைப் போக்கி நாட்டில் அமைதி ஏற்படுத்தத் தனது பங்களிப்பை அளிப்பதாக உறுதி கூறினார் என்றார்.

இதற்கு பின்பு, ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:
இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளைச் சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைக் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு ரஜினி பதிவிட்டுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :