தமிழகத்தில் 2வது நபருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு.. எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரானா பாதித்து சிகிச்சை பெற்றார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது தெரியவந்தது. இது குறித்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

டெல்லியில் இருந்து சென்னை வந்த வடமாநில இளைஞர்(வயது 20) ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யார், யாருடன் தொடர்பில் இருந்தார் என கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் உள்ளார். ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை தரப்பட்டது.

இது வரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஒரு லட்சத்து 89,750 பேர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 2,984 பேர் தனிமைப்படுத்தப்பட்டுத் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். காய்ச்சலில் இருந்த 32 பேர் மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்.


இது வரை 222 பேரின் ரத்தமாதிரிகள் சோதனையிடப்பட்டதில் 166 பேருக்கு கொரோனா இல்லை என்று தெரிந்தது. 55 மாதிரிகள் இன்னும் ஆய்வில் உள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது, கொரோனா அதிகம் பாதித்துள்ள மகாராஷ்டிரா, கேரளாவில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds