விவசாயிகளுக்கு உதவ அவசர தொலைப்பேசி.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்துச் சென்று விற்பதற்கு உதவுவதற்காக அவசரக்கால தொலைப்பேசி எண்களை முதல்வர் அறிவித்துள்ளார்.கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் நிலத்திலேயே அழிப்பதாகச் செய்திகள் வந்தன.


இதையடுத்து, விவசாயிகளின் விளைபொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்குத் தடை இல்லை என்று ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று(ஏப்.7) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய அவசரக்கால தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைப்பேசி எண்கள் மூலம், வியாபாரிகளைத் தொடர்பு கொள்ளுவது, சரக்கு போக்குவரத்து அனுமதி, குளிர்சாதனக் கிடங்கு சேவை போன்ற உதவிகளைப் பெறலாம்.

தமிழகத்திற்குள் கொண்டு செல்ல, 044-22253884, 22253883, 22253496, 95000 91904 என்ற எண்களைக் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும், காய்கறிகள் மற்றும் பழங்களைக் குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ஏப்.30 வரை வசூலிக்கப்படாது.

மக்களுக்கு நியாயமான விலையில் தரமான காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்கவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.விளைபொருட்களைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், அந்தந்த மாவட்ட வேளாண் துணை இயக்குநரை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds