சென்னை குடிமகன்களுக்கு டாஸ்மாக் சரக்கு கிடையாது.. கடை திறக்கப்படாது என அறிவிப்பு

சென்னை மாநகர் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை மறுநாள்(மே7) திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு கடந்த 4ம் தேதி ஊரடங்கை நீட்டித்த போதிலும், சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, டெல்லி, சட்டீஸ்கர், கர்நாடகம், ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் நேற்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கெல்லாம் 2 வது நாளாக இன்றும் மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.


இந்நிலையில், தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகளை நாளை மறுநாள்(மே7) முதல் திறக்கப் போவதாக தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. எனினும், மதுபானக் கூடங்களை (பார்) திறப்பதற்கு அனுமதியில்லை என்றும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் வரும் 7ம் தேதி திறக்கப்பட மாட்டாது. இந்த கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 25ம் தேதியன்று ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் குவிந்ததால்தான் கொரோனா தொற்று பலருக்கும் வேகமாக பரவியது. இந்த மார்க்கெட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மூலம் அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.


இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறந்தால் பெருங்கூட்டம் கூடும். சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கோயம்பேடு போல் டாஸ்மாக் கடைகளும் கொரோனா பரப்பும் மையமாகி விடும் என்று எடப்பாடி அரசின் முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், கமல், டி.டி.வி.தினகரன் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது எடப்பாடி பழனிசாமி அரசு, சென்னையில் டாஸ்மாக் கடை திறப்பு இல்லை என்று கூறியிருக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds