ராயபுரம் மண்டலத்தில் 5 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..
Royapuram, tondaiyarpet still corona hotspot in chennai.
சென்னை ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 1477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இது வரை 28,924 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. மண்டல வாரியாக கொரோனா பாதிப்பைக் கவனித்தால், ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில்தான் அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
திருவெற்றியூர் மண்டலத்தில் 1072 பேர், மணலி-418, மாதவரம்-780, தண்டையார் பேட்டை-3781, ராயபுரம்-4821. திரு.வி.க.நகர்-2660, அம்பத்தூர்-987, அண்ணா நகர்-2781, தேனாம்பேட்டை-3464, கோடம்பாக்கம்-3108, வளசரவாக்கம்-1268, ஆலந்தூர்-587, அடையாறு-1607, பெருங்குடி-536, சோழிங்கநல்லூர்-827 பேர் என்று கொரோனா பாதித்துள்ளது. சென்னையில் இது வரை கொரோனாவுக்கு 294 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2569 பேருக்கும், திருவள்ளூரில் 1752 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.
You'r reading ராயபுரம் மண்டலத்தில் 5 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News