Advertisement

தமிழ்நாட்டில் கொரோனா பலி 1000ஐ தாண்டியது..

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. இது வரை 78,335 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை மறு நாளுடன்(ஜூன்30) முடிகிறது. 90 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. தினந்தோறும் 3 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகமானோருக்கு கொரோனா பரவி வருகிறது.


சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதால், தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அதில், சென்னையில் மட்டுமே சராசரியாக 2000 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இப்போது மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா பரவத் தொடங்கியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்27) ஒரே நாளில் 3713 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் அடக்கம்.தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 2737 பேரையும் சேர்த்து 44094 பேர் குணம் அடைந்துள்ளனர்.சென்னையில் மட்டுமே நேற்று 1939 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 51,699 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் நேற்று 249 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 4911 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 146 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 3420 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 98 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 1683 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

மேலும், மதுரையில் 217 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால், அங்குப் பாதிப்பு 1703 ஆக அதிகரித்தது. திருவண்ணாமலையில் 110 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அம்மாவட்டத்தில் இது வரை 1624 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வேலூரில் நேற்று 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 1011 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களிலும் நேற்று 20, 25 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியிருக்கிறது.இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 68 பேர் பலியாயினர். இதையடுத்து, பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று வரை 1025 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க
famous-writer-narumbu-nathan-s-sudden-demise-nellai
பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் திடீர் மறைவு... நெல்லையில் அதிர்ச்சி
special-law-to-protect-social-welfare-activists
சமூக நல ஆர்வலர்களை பாதுகாக்க தனிசட்டம் - ஆரல்வாய்மொழி சமூக பொது நல இயக்கம் கோரிக்கை
best-speaker-legislative-assembly-ai-rejects-appavu-s-speech
சிறந்த சபநாயகர், சட்டமன்றம் : அப்பாவு பேச்சுக்கு ஏஐ மறுப்பு
tamil-nadu-s-two-language-policy-should-be-followed-by-all-states
தமிழகத்தின் இரு மொழி கொள்கையை அனைத்து மாநிலங்கும் கடைபிடிக்கும் நிலை - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
oh-my-you-re-the-one-who-fought-with-your-mother-k-n-nehru-creates-a-stir-on-the-banks-of-the-bharani-river
ஏம்பா நீ அன்னைக்கு சண்டை போட்டவன்தானே - பரணி கரையில் கே.என். நேருவால் கலகலப்பு
we-will-expose-evm-fraud-party-members-fighting-for-the-people-petition-the-governor
EVM மோசடியை அம்பலப்படுத்துவோம்... - மக்களுக்காகப் போராடும் கட்சியினர் ஆட்சியரிடம் மனு.
congress-veterans-who-are-swayed-by-the-wealth-of-the-rich-can-apply-for-the-post-online
இணையதளம் வழியாக பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: செல்வப்பெருந்தகை இன்னாவேடிவால் ஆடி போய் கிடக்கும் காங்கிரஸ் பழந் தலைகள்!
actor-vijay-s-y-category-who-has-what-protection-in-india
நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு : இந்தியாவில் யார் யாருக்கு என்ன பாதுகாப்பு?
bjp-is-playing-the-field-with-sengottaiyan-will-aiadmk-be-united
செங்கோட்டையனை வைத்து களம் விளையாடும் பா.ஜ.க : அதிமுக ஒன்று படுமா?
former-sports-minister-ravindranath-attacked-rv-udayakumar
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரே... ஆர்.பி உதயகுமாரை தாக்கிய ரவீந்தரநாத்