தமிழ்நாட்டில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா.. பலி 1201 ஆக அதிகரிப்பு

corona cases crossed 90,000 in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Jul 1, 2020, 09:56 AM IST

தமிழ்நாட்டில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், 90 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் தமிழகத்தில் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது. தினந்தோறும் 3 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் தொடர்ந்து அதிகமானோருக்கு கொரோனா பரவி வருகிறது.

சென்னையில் மட்டுமே சராசரியாகத் தினமும் 2000 பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இப்போது மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்30) ஒரே நாளில் 3943 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 87 பேரும் அடக்கம்.
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது. இதில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 2325 பேரையும் சேர்த்து 50.074 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் மட்டுமே நேற்று 160 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் நேற்று 160 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 5419 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 153 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 3830 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 90 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 1977 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

மேலும், மதுரையில் நேற்று ஒரே நாளில் 246 பேருக்குத் தொற்று உறுதியானதால், அங்குப் பாதிப்பு 1997 ஆக அதிகரித்தது. இதே போல், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தர்மபுரி, நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமே நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 60 பேர் பலியாயினர். இதையடுத்து, பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று வரை 1201 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

You'r reading தமிழ்நாட்டில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா.. பலி 1201 ஆக அதிகரிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை