ஊத்தப்பம் கேட்டு சண்டையிட்ட இளைஞர்... திமுகவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

The youth who fought for Uthappam ..

by Sasitharan, Aug 20, 2020, 17:07 PM IST

மயிலாடுதுறையில் பிரபல உணவகம் ஒன்றில் 6 இளைஞர்கள் சாப்பிடச் சென்றுள்ளனர். மதுபோதையில் இருந்த அவர்களுக்கு சப்ளையர் உணவு ஆர்டர் எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது இளைஞர்கள் 6 பேரும், ஊத்தப்பம் கேட்டுள்ளனர். ஊத்தப்பம் இல்லை என்று பலர் கூற, ஊத்தப்பம் கண்டிப்பாக வேண்டும் என்று அவருடன் இவர்கள் 6 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் செய்வது சண்டையாக மாற, ஆறுபேரும் சப்ளையரை அடித்து நொறுக்கியுள்ளனர். பின்பு அவரை கத்தியால் குத்த முயன்றுள்ளனர்.

இந்த சம்பவம் பரபரப்பாக உணவக ஓனர் கடையில் இருந்த சிசிடிவி பதிவுகளுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீசார், விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் உணவகத்தில் சண்டையிட்டது ம. படுகை திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் பிரதாப் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது. இளைஞர்கள் 6 பேரும் ஹோட்டலில் சண்டையிடும் காட்சிகள் வெளியாக, திமுகவைக் குறிப்பிட்டு அதை தற்போது நெட்டிசன்கள் செய்து வருகிறார். ஏற்கனவே ஓசி பிரியாணி, பரோட்டா கேட்டு திமுக நிர்வாகிகள் சண்டையிட்டதும், நெட்டிசன்கள் டிரெண்ட் செய்ததும் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த சம்பவமும் திமுகவுக்கு எதிராகச் செய்யப்பட்டு வருகிறது.

You'r reading ஊத்தப்பம் கேட்டு சண்டையிட்ட இளைஞர்... திமுகவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை