கொரோனா பாதிப்பு எனக் கூறி உடலுறுப்புகள் திருட்டு?!.. சர்ச்சையில் பட்டுக்கோட்டை மருத்துவமனை

pattukottai hospital issue

by Sasitharan, Aug 26, 2020, 19:28 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் சலீம். நகைக்கடை அதிபரான இவர் கடந்த ஜூலையில் மூச்சுத்திணறல் காரணமாக தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த சோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டது. சிகிச்சையில் இருந்த அவர் மூச்சுத்திணறல் காரணமாக ஜூலை மாதம் கடைசியில் உயிரிழந்தார். இதையடுத்து சலீமின் உடல் பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, இன்று சலீமின் மனைவி சர்மிளா, அவரின் குழந்தைகள் , உறவினர்கள் மொத்தமாக பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் சலீமின் படத்தை கைகளில் ஏந்தியபடி குவிந்தனர். பின்னர் சார் ஆட்சியர் பாலச்சந்தரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனு தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனுவில், `` தனது கணவர் சலீமின் உடல் அடக்கம் செய்யப்படும் போது தமிழக அரசின் கொரோனோ விதிமுறை அமலில் இருப்பதாக கூறி உடலை எங்களிடம் காட்டவில்லை. 12 மணி நேரம் கழித்து தான் உடலை எங்களிடம் வழங்கினார்கள். காலதாமதமாக உடல் வழங்கியதால் கணவரின் உடல் உள்ளுறுப்புகள் களவாடப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள கொரோனாவால் இறந்தவர்கள் பட்டியலில் என் கணவரின் பெயர் இல்லை. இதனால் என் கணவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது.

கொரோனா பாதிப்பில்லாத என் கணவருக்கு சிகிச்சையை தவறுதலாக அளித்துள்ளனர். அதனால் துர்மரணம் ஏற்பட்டுள்ளது. எனவே எனது கணவரின் உடலை தோண்டி எடுத்து மருத்துவக்குழு மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்" என மனு அளித்துள்ளனர் .

You'r reading கொரோனா பாதிப்பு எனக் கூறி உடலுறுப்புகள் திருட்டு?!.. சர்ச்சையில் பட்டுக்கோட்டை மருத்துவமனை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை