இந்த வருஷம் விற்பனை ரொம்ப மோசம்.... தோவாளை பூ வியாபாரிகள் கலக்கம்

'பூ'வுக்கு பேர் போன இடம் தோவாளை என அனைவருக்கும் தெரியும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் கூட இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வருடத்தில் எல்லா மாதங்களிலும் தாராளமாக பூ கிடைக்கும் என்பது தான் தோவாளையின் சிறப்பம்சமாகும். இந்நிலையில் கொரோனா இங்குள்ள பூ விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தி விட்டது. ஊரடங்கு காரணமாகத் திருமணங்கள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் பலவும் ரத்து செய்யப்பட்டதால் கடந்த சில மாதங்களாகவே தோவாளை பூ மார்க்கெட் மிகவும் 'டல்'லாக காணப்படுகிறது.

தோவாளை கேரள மாநிலத்தை ஒட்டி இருப்பதால் பெரும்பாலும் திருவனந்தபுரம் உள்படக் கேரளாவின் தென் மாவட்டங்களுக்கு இங்கிருந்து தான் தினமும் டன் கணக்கில் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக ஓணம் பண்டிகையின் போது பெருமளவு பூக்கள் விற்பனையாகும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்கள் 10 நாட்கள் வீடுகள் முன் பூக்கோலம் இடுவார்கள். இதனால் தினமும் 10 முதல் 15 டன் வரை பூக்கள் விற்பனையாகும். இவ்வருடம் வரும் 31ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணத்தின் முந்தைய நாள் மட்டும் 30 முதல் 35 டன் வரை பூக்கள் விற்பனையாகும்.

ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதாலும், வெளிமாநிலத்தில் இருந்து பூக்களைக் கொண்டு வந்தால் கொரோனா பரவும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாலும் இவ்வருடம் வழக்கமாக நடைபெறும் விற்பனையில் பாதி கூட இல்லை என்று பூ வியாபாரிகள் வேதனையுடன் கூறுகின்றனர். தற்போது வெளி மாநிலங்களில் இருந்து பூக்களைக் கொண்டு வரலாம் எனக் கேரள அரசு உத்தரவிட்ட போதிலும் விற்பனை அதிகரிக்கவில்லை. இதனால் ஓணம் பண்டிகையும் தோவாளை பூ வியாபாரிகளை ஏமாற்றிவிட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :