கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜே.இ.இ. தேர்வு தொடக்கம்.. தமிழகத்தில் 53 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு..

நாடு முழுவதும் திட்டமிட்டபடி ஜே.இ.இ தேர்வு இன்று(செப்.1) காலை தொடங்கியது. தமிழகத்தில் 53,765 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்த தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்த போதிலும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்ட போதிலும் மத்திய அரசு இதை நடத்துகிறது.

அதே போல், ஐ.ஐ.டி போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஜே.இ.இ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால், இந்த தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. திட்டமிட்டபடி, செப்.1ம் தேதி முதல் செப்.6ம் தேதி வரை ஜே.இ.இ. தேர்வுகளும், செப்.13ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதன்படி, இன்று ஜே.இ.இ தேர்வு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 660 தேர்வு மையங்களில் மொத்தம் 9 லட்சத்து 53,473 மாணவ, மாணவியர் ஜே.இ.இ தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 34 தேர்வு மையங்களில் 53,765 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஒரு ஷிப்டில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 32 ஆயிரத்தில் இருந்து 85 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய தேர்வு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

மேலும், தேர்வு மையங்களில் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி தரப்படுகிறது. மேலும், கைகளைக் கழுவுவதற்கு போதிய தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு அமரும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய தேர்வு அமைப்பின் இயக்குனர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, குஜராத்தில் 23 மாவட்டங்களில் 38 ஆயிரத்து 167 மாணவர்கள், ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வு எழுதவிருப்பதாக மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் தெரிவித்திருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :