தமிழகம் முழுவதும் பஸ், ரயில் சேவை மீண்டும் தொடங்கின..

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்தும், சிறப்பு ரயில் போக்குவரத்தும் மீண்டும் தொடங்கியிருக்கிறது.கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பஸ், ரயில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மண்டலங்களில் கடந்த ஜூன் 26ம் தேதி பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதன் மூலம் கொரோனா தொற்று வேகமாகப் பரவியதால், ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.

அதன் பிறகு, இம்மாதம் 1ம் தேதி முதல் அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதன்தொடர்ச்சியாக, இன்று முதல் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது. இதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை என்று வெளியூர்களுக்கு வழக்கம் போல் பஸ்களை இயக்கத் தொடங்கியுள்ளது. விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இன்று தொடங்கியுள்ளது.சென்னை கோயம்பேட்டில் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. முகக் கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

அனைவருக்கும் கிருமிநாசினி கொடுத்து கைகளைச் சுத்தப்படுத்திய பிறகு பஸ்சில் இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.மாவட்டங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 6.10 மணிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. இதே போல், சென்னை-கோவை இடையே இரவு நேரச் சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. மேலும், சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி, மதுரை, தூத்துக்குடிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :