சூர்யா சொன்னதில் என்ன தப்பு இருக்கு.. மார்க்சிஸ்ட் கேள்வி..

நடிகர் சூர்யா சொன்னது உண்மைதானே. அவமதிப்புக்கு எங்கே இடம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார்.

நடிகர் சூர்யா ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார். தற்போது 3 பேர் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்த நிலையில், மீண்டும் காட்டமாக ஒரு அறிக்கையை சூர்யா வெளியிட்டார். அதில், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள். அனல் பறக்க விவாதிப்பார்கள் என்று கூறியிருந்தார்.


இதையடுத்து, சூர்யா நீதிமன்றத்தை அவமதிப்பது போல் அறிக்கை விட்டிருப்பதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டுமென நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். உடனே, முன்னாள் நீதிபதிகள் சந்துரு, கே.என்.பாஷா உள்பட 6 பேர் சேர்ந்து தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில் சூர்யா மீது அவமதிப்பு வழக்கு எடுக்கக் கூடாது என்று கோரியிருந்தனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு: நீட் தேர்வின் ஆபத்து குறித்து நடிகர் சூர்யாவின் கருத்து, மாணவர்கள் மீதான அக்கறையின் வெளிப்பாடு. அரசும், நீதிமன்றங்களும் என்ன செய்கின்றனவோ அதைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் அவமதிப்புக்கு இடம் எங்கே வந்தது? வீடியோ கான்பிரன்சிங் விசாரணை நடப்பது உண்மைதானே?



கொரோனா காலத்திலும் நீட் தேர்வுகள் நடத்துமாறு தீர்ப்புச் சொல்லப்பட்டதும் உண்மைதானே? மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு, மாணவர்களை பலியெடுத்துக் கொண்டுள்ளது. நீதிமன்றங்களும் அதற்கு ஒத்துப் போகலாமா? நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதை விட்டுவிட்டு, விமர்சனங்களை முடக்கும் போக்கு ஆபத்தானது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை பறிப்பதாகும்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :