விஜயகாந்த் தேறி வருகிறார்.. பிரேமலதாவிடம் முதல்வர் தொலைப்பேசியில் விசாரிப்பு..

விஜயகாந்த் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதாவிடம் தொலைப்பேசியில் விசாரித்தார். விஜயகாந்த் உடல்நிலை தேறி வருவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. விஜயகாந்த் கடந்த 2 ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சிங்கப்பூருக்குச் சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதில்லை.
அவருக்குக் கடந்த 23ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் நலமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விஜயகாந்த் வழக்கமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக, சென்னை மியாட் ஆஸ்பத்திரிக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் மியாட் ஆஸ்பத்திரிக்குப் பரிசோதனைக்காகச் சென்ற விஜயகாந்த்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்த்தின் உடல் நலம் குறித்து அவரது மனைவி பிரேமலதாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரித்தார். மேலும், முதலமைச்சர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தி அறிந்து, அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த்திடம் தொலைப்பேசியில் விசாரித்தேன். அவர் பூரண நலம்பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் விஜயகாந்த் விரைவில் குணம் அடைய வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, விஜயகாந்த் வீட்டு வாசலில், கொரோனா பாதித்த வீடு என்று சிவப்பு நிற ஸ்டிக்கரை மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டினர். இதனால் கோபமடைந்த விஜயகாந்த் வீட்டு வேலைக்காரர்கள், அதைக் கிழித்தெறிந்ததாகவும் நகராட்சியினர் மீண்டும் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறுகையில், கேப்டன் உடல்நிலை நன்றாக உள்ளது. விரைவில் அவர் முழு குணம் அடைந்து வீடு திரும்புவார். நாங்கள் மாநகராட்சி மேற்கொள்ளும் வழக்கமான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds

READ MORE ABOUT :