தென்காசி அருகே கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்கள் பணம் பல கோடி ஸ்வாஹா..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் கிராமத்தில் கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்த சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களது ஒவ்வொருவர் பெயரிலும் இங்கு வங்கிக் கணக்கு உள்ளது. பலர் லட்சக்கணக்கான ரூபாயை இந்த சங்கத்தில் டெபாசிட் செய்துள்ளனர்.இந்த நிலையில் இங்கு பணியாற்றும் சிலர் போலியான கையெழுத்தைப் போட்டு உறுப்பினர்களின் பணத்தை எடுத்துக் கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.

நேற்று பல லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருந்த ஒருவர் தனது பணத்தை எடுக்கச் சென்றபோது அத்தனை பணமும் ஏற்கனவே எடுக்கப்பட்டதாக வங்கி ஊழியர் தெரிவித்தார்.கணினியிலும் அவரது கணக்கில் மிகக் குறைந்த அளவு பணமே இருப்பு உள்ளதாகக் காட்டப்பட்டது. தனது பணம் ஸ்வாஹா செய்யப்பட்டதை உணர்ந்த அவர் மற்ற உறுப்பினர்களுக்கும் இதுபற்றி தெரிவித்தார்.

இதையடுத்து காலை முதலே ஏராளமானோர் இந்த சங்கத்திற்கு வந்து தங்களது கணக்குகளைச் சரிபார்த்தனர். கிட்டத்தட்ட அனைவரது கணக்கிலிருந்தும் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. நேரம் செல்லச்செல்ல வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவதை அறிந்த சங்க ஊழியர்கள் அதை பூட்டிவிட்டுத் தப்பிவிட்டனர்.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கோடி அளவில் உறுப்பினர்களின் பணம் மோசடி செய்யப்பட்டதாக வந்த தகவல் ரவணசமுத்திரம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
tenkasi-district-dmk-official-sent-sexual-videos-to-girl-her-family-attacked-him
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள்
thenkasi-wife-her-paramour-and-2-more-were-arrested-in-youth-murder
2 வது கணவனை கொலை செய்து கள்ளக்காதலனுடன் உல்லாசம்
to-declare-vasudevanallur-as-a-public-constituency-case-sought-adjournment-of-judgment
வாசுதேவநல்லூர் பொது தொகுதியாக அறிவிக்க கோரிய வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு
farmers-struggle-with-sugarcane-in-tenkasi
தென்காசியில் கரும்புடன் வந்து விவசாயிகள் போராட்டம்
tenkasi-pwd-officer-fined-rs-50-000-state-information-commissioner-action
தென்காசி பொதுப்பணித்துறை அதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்: மாநில தகவல் ஆணையர் நடவடிக்கை
allow-to-bathe-in-courtallam-falls-sarathkumar-s-request
குற்றால அருவியில் குளிக்க விடுங்க.. சரத்குமார் வேண்டுகோள்
did-mla-poongothai-attempt-suicide
தற்கொலைக்கு முயன்றாரா எம்.எல்.ஏ. பூங்கோதை?
floods-in-courtallam-falls-due-to-heavy-rains-in-tenkasi-area
பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..
sale-of-land-owned-by-the-police-department-with-forged-documents-registration-department-employee-suspended
போலி ஆவணங்கள் மூலம் காவல் துறைக்கு சொந்தமான இடம் விற்பனை... பத்திரப்பதிவு ஊழியர் சஸ்பெண்ட்...!
wanted-and-received-for-50-thousand-rupees-parents-trying-to-sell-daughter-in-sankarankovil
50 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு பெற்ற மகளை விற்க முயன்ற பெற்றோர்
Tag Clouds

READ MORE ABOUT :