முதலில் சசிகலா.. இப்போது பொன்முடி மகன்.. தமிழகத்தில் அடுத்தடுத்த அதிரடியில் அமலாக்கத்துறை!

dmk mp gautham sigamani assets frozen by Enforcement Directorate

by Sasitharan, Oct 16, 2020, 18:18 PM IST

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை சமீபத்தில் நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், வணிக வளாகம் என 187 இடங்களில்வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அப்போது சசிகலா 6 0 - க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விரிவானவிசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து , கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1,600 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான பினாமி சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தனர்.

இந்நிலையில், திமுக எம்.பி கவுதம் சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாடுகளில் சொத்து வாங்கியது தொடர்பாக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading முதலில் சசிகலா.. இப்போது பொன்முடி மகன்.. தமிழகத்தில் அடுத்தடுத்த அதிரடியில் அமலாக்கத்துறை! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை