தமிழகத்தில் 10வது நாளாக கொரோனா பாதிப்பு சரிவு..

New corona cases come down in tamilnadu for 10th day.

by எஸ். எம். கணபதி, Oct 22, 2020, 11:09 AM IST

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிகமாகப் பாதித்தது. தற்போது புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் தினமும் புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. சில நாட்களுக்குப் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. பின்னர், இது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. தொடர்ந்து 10வது நாளாக புதிய பாதிப்பு குறைந்து வருகிறது.

நேற்று 3086 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 97,116 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4301 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 50,856 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 39 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,780 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 35,480 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று புதிதாக 845 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 159 பேர் காஞ்சிபுரம் 106, திருவள்ளூர் 180, கோவையில் 314, சேலம் 198, திருப்பூர் 120, ஈரோடு மாவட்டத்தில் 108 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த 8 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 92,527 பேருக்கும், செங்கல்பட்டில் 41,815 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 36,510 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.மாநிலம் முழுவதும் இது வரை சுமார் 92 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 81,782 பேருக்குப் பரிசோதனை செய்ததில் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading தமிழகத்தில் 10வது நாளாக கொரோனா பாதிப்பு சரிவு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை