குற்றாலம் அருகே ரூ 45 லட்சம் கொள்ளை 5 பேர் கைது...!

Rs.45 lakh robbery near courtallam: Five arrested

by Balaji, Oct 22, 2020, 17:12 PM IST

குற்றாலம் அருகே கேரள வாலிபரிடம் 45 லட்சம் ரூபாய் பணத்தை அபகரித்துச் சென்றதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 45 லட்ச ரூபாய் பணமும் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் குற்றாலம் அருகே நன்னகரத்தில் நாகூர் மீரான் (42) என்பவரது வீடு ஒன்றை விலைக்கு வாங்க வந்தார். இதற்காக 45 லட்ச ரூபாய் பணத்துடன் வந்த அவரை வீட்டு உரிமையாளரான நாகூர் மீரான் (42) கழுகு மலையைச் சேர்ந்த அணில் குமார்(56), கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நசீர்(48) இலஞ்சியைச் சேர்ந்த மணிகண்டன் (29) சதீஷ்குமார் (23) ஆகியோர் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை அபகரிப்புச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்துல் காதர் கொடுத்த புகாரின் பேரில் குற்றாலம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணமும் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

You'r reading குற்றாலம் அருகே ரூ 45 லட்சம் கொள்ளை 5 பேர் கைது...! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை