தமிழகத்தில் இது வரை 7 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. சிகிச்சையில் 34 ஆயிரம் பேர்..

தமிழகத்தில் இது வரை மொத்தம் 7 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 10,825 பேர் பலியாகியுள்ளனர். ஆறரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. கடந்த மாதம் முதல், புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் தினமும் புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. சில நாட்களுக்குப் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. பின்னர், இது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது.

இந்நிலையில், தொடர்ந்து 11வது நாளாக புதிய பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 3077 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இது வரை 7 லட்சத்து 193 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4314 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 55,170 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 45 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,825 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 34,198 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று புதிதாக 833 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 193 பேர் காஞ்சிபுரம் 99, திருவள்ளூர் 170, கோவையில் 285, சேலம் 140, திருப்பூர் மாவட்டத்தில் 155 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 93,299 பேருக்கும், செங்கல்பட்டில் 42,063 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 36,657 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் இது வரை சுமார் 92 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 81,259 பேருக்குப் பரிசோதனை செய்ததில் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :