பரோல் முடியும் முன்பே சிறைக்கு திரும்பும் சசிகலா: குடும்ப பிரச்னை காரணமா ?

கணவரின் இறுதிச்சடங்களில் கலந்துக் கொள்வதற்காக வந்த சசிகலா பரோல் காலம் முடிவதற்கு முன்பே நாளை சிறைக்கு திரும்புகிறார். குடும்ப பிரச்னையை சமாளிக்க முடியாமல் அவர் சிறைக்கே திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் இறந்ததை தொடர்ந்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். இவர், தஞ்சையில் அருளானந்த நகரில் உள்ள வீட்டில் தங்கி வருகிறார்.  சசிகலாவை சந்தித்து துக்கம் விசாரிக்க தினமும் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று நடராஜனின் சகோதரர் குடும்பத்தினர் விளாரி கிராமத்தில் ஈமச்சடங்குகளை நடத்துகின்றனர். இதை தொடர்ந்து, இன்று அவரது மண்டபத்தில் படத்திறப்பு விழா நடைபெறுகிறது.

இதற்கிடையே, குடும்பத்திற்குள் பிரச்னை, டிடிவி தினகரனுக்கும் விவேக்கிற்கும் மோதல் போக்கு, சொத்து பிரச்னை, டிடிவிக்கும் திவாகரனுக்கும் நீடித்து வரும் உள்போர் என பல்வேறு பிரச்னைகளை பரோலில் வந்த சசிகலா சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்.

நான் சிறையில் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் ஆளாளுக்கு ராஜாங்கம் செய்து வந்தால் எப்படி குடும்பத்தை கட்டி காப்பீர்கள் என ஆதங்கப்பட்டு உள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற சசிகலா நாளை சிறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.

சசிகலாவிற்கு வரும் ஏப்ரல் 3ம் தேதியுடன் பரோல் காலம் முடிவடைகிறது. ஆனால், குடும்ப பிரச்னைகளை சமாளிக்க முடியாமல், இன்று படத்திறப்பு விழா முடிந்த நிலையில் நாளை பெங்களூரு சிறைக்கு செல்கிறார் என கூறப்படுகிறது.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds