ராஜீவ்காந்தி கொலை வழக்கு : 7 பேரை உடனடியாக விடுவிக்க வாய்ப்பில்லை : முதல்வர்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநர் இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.இன்று நாகர்கோவில் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத வழங்கத் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது போல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநர் இன்னும் அனுமதி வழங்காத நிலையில் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இது சட்டம் சம்பந்தப்பட்ட விவகாரம். இலங்கையில் நல்ல நிலையில் உள்ள படகுகள் அனைத்தையும் ஏற்கெனவே தமிழக மீனவர்கள் மீட்டுக் கொண்டு கொண்டு வந்து விட்டனர் எஞ்சியுள்ள 121 படகுகளும் பழுதடைந்து விட்டது. அந்த படகுகளைத் தான் அங்குள்ள நீதிமன்றம் அழிக்க உத்தரவிட்டுள்ளது .

கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு அம்மாநில அரசுகளின் ஒப்புதல் பெறவேண்டும் என்று அந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. அதைப் போலத் தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை. அது போன்ற சூழ்நிலை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார்.கேரளாவில் கொரோனா நோய் பரவல் அதிகமாக உள்ளதால் அங்கு இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேரளாவிலிருந்து வருபவர்களால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பரவினால் அது தமிழகம் முழுவதும் பரவிவிடும். எனவே அதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதாகவும் இதற்கு அரசு எடுத்த நடவடிக்கையே காரணம் என்றும் அவர் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds