ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் விருது!
அம்பேத்கார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். அம்பேத்காரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது 1998 ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூபாய் 100,000 பணமுடிப்பும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். ஆதிதிராவிடதர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டுஅவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி
தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
அவ்வகையில், 2021ம் ஆண்டு திருவள்ளூவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
www.tn.gov.in./ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து இவ்விருதுக்கான விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ங்கள் வரும் 25ம் தேதிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/11/annalambedkar_award_applnform_t-(1).pdf
You'r reading ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் விருது! Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News